ஜூன் 17 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – UK பிரதமர் அறிவிப்பு!!
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தாக்கம் காரணமாக ஜூன் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.
மீண்டும் ஊரடங்கு:
2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் காரணமாக உலகமே ஊரடங்கு அமல்படுத்தியது. இந்நிலையில் உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு அதனை கட்டுப்படுத்தி வருகின்றனர். பல நாடுகள் தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வந்தனர். பல வளர்ந்த நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டறிந்து அதில் வெற்றி கண்டு மக்களுக்கு செலுத்தும் பணியை தொடங்கியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்ற அறிவிப்பு – ரிசர்வ் வங்கி விளக்கம்!!
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் ஒருவருக்கு பரிமாண வளர்ச்சி அடைந்த கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பரவல் சாதாரண கொரோனாவை விட இருமடங்கு இருந்தது. இதனால் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டன. எனவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூன் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – ஜனவரி 31க்குள் விண்ணப்பிக்கலாம்!!
மேலும் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் தங்களை 10 நாட்கள் சுய தனிமைபடுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி வழங்கும் திட்டம் சரியான வகையில் செயல்படுத்தும் வரை மக்களுக்கு ஊரடங்கு தளர்வுகள் இல்லை என்று கூறியுள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்