ரூ.40 ஆயிர ஊதியத்தில் ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 !!
இந்திய தனித்துவ அடையாள ஆணையமான (UIDAI) ஆதார் துறையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாணையத்தில் Consultant (Official Language) பணிகளுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் எங்கள் இணையதளத்தின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | UIDAI |
பணியின் பெயர் | Consultant |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 19.04.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
UIDAI ஆணையத்தில் Consultant (Official Language) பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆதார் பணிகள் வயது வரம்பு :
அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
UIDAI கல்வித்தகுதி :
- மத்திய/ மாநில / பொதுத்துறை/ தனியார் துறைகளில் அல்லது நிறுவனங்களில் Hindi Translator or Translation Officer/ Higher Rank/ Post ஆகிய பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
- Official Language Implementation மற்றும் translation work ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
UIDAI ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் அதிகபட்சம் ரூ.40,000/- வரை சம்பளம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.