ஆதார் துறை வேலைவாய்ப்பு 2021 – விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே ….!
Application Developer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக ஆதார் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க 17.06.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Application Developer பணிக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
- அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் BE/ B.Tech அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 05 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
- திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் வரும் 17.06.2021 அன்றுக்குள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.