கல்லூரி மாணவர்களுக்கான திட்டங்களில் மாற்றம் – UGC அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
பல்கலைக்கழக மானிய குழுவானது கல்லூரி மாணவர்களுக்கான மூன்று திட்டங்களின் அமைப்பை மாற்றியுள்ளது. இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
UGC அறிவிப்பு:
பல்கலைக்கழக மானிய குழுவானது (UGC) அனைத்து கல்லூரிகளுக்குமான செயல்பாடுகளையும் நிர்வாகித்து வருகிறது. மாணவர்களுக்கான உதவித்தொகை போன்றவற்றையும் UGC கண்கானித்து வந்தது. இந்நிலையில், தற்போது மூன்று முக்கிய திட்டங்களுக்கான நிர்வாகத்தை மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, NFSC மற்றும் OBCக்கான தேசிய பெல்லோஷிப் இரண்டும் தற்போது மூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இதேபோல், சிறுபான்மை விவகார அமைச்சகத்திடம் மௌலானா ஆசாத் தேசிய பெலோஷிப் திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. NFSC தேசிய பெல்லோஷிப்பின் கீழ் அனைத்து பாடங்களுக்கும் மொத்தம் 2,000 இடங்கள் உள்ளது. மேலும்,OBCக்கான தேசிய பெல்லோஷிப்பின் கீழ் 300 இடங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மௌலானா ஆசாத் நேஷனல் பெல்லோஷிப் சீக்கிய, முஸ்லீம், ஜெயின், பார்சி, கிறிஸ்தவம், பௌத்தம் ஆகிய பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு 5 வருட படிப்பிற்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அமெரிக்க விசா பெறுவதில் முன்னேறிய இந்தியா – 2023ல் இரண்டாம் இடம்!
Exams Daily Mobile App Download
இந்த திட்டங்கள் முன்னதாக செப்டம்பர் 30, 2022 வரை பல்கலைக்கழக மானிய குழுவின் கீழ் தான் செயல்பட்டு வந்ததாகவும், அக்டோபர் 1, 2022 தான் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு நேரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.