திறன் வளர்ப்பு படிப்புகள் தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்பு – யுஜிசி அறிவிப்பு
தேசிய திறன் தகுதி கட்டமைப்பின் கீழ் பல்வேறு திறன் சார்ந்த திறனறி மற்றும் திறன் வளர்ப்பு பாடங்களை நடத்துவதற்கு விருப்பம் உள்ள கல்லூரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக யுஜிசி அறிவித்து உள்ளது.
நடப்பு கல்வியாண்டில் 2020-2021 மாணவர்களுக்கு திறன் சார்ந்த பாடங்களை நடத்துவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள கல்லூரிகள் யுஜிசி இடம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிய நெறிமுறைகள் படி, மாணவர்களுக்கு இந்த திறன் வளர்ப்பு பாடங்களை நடத்தும் கல்லூரிகளுக்கு யுஜிசி நிதியுதவி அளிக்கும் எனபது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்துவதோடு, கல்லூரிகளின் உட்கட்டமைப்பினையும் மேம்படுத்திக் கொள்ளலாம். இந்த திறன் வளர்ப்பு பாடங்களை நடத்த விருப்பம் உள்ள கல்லூரிகள் வரும் ஜூன் 30 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |