இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு – UGC அறிவிப்பு!

0
இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு - UGC அறிவிப்பு!
இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு - UGC அறிவிப்பு!
இந்தியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு – UGC அறிவிப்பு!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு உயர் கல்வி தொடர வரும் மாணவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று உயர்கல்வி துறை தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விரிவான தகவல்களை கீழே உள்ள பதிவில் காணலாம்.

உயர்கல்வித்துறை:

இந்தியாவில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல புதிய கல்வி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை டிஜிட்டல் முறையில் நடத்தும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டம் ஒரு சில தனியார் பள்ளிகளில் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்போது அனைத்து அரசு பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது. மேலும் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் கல்வியின் தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்திய உயர்கல்வியின் தரத்தை வெளிநாடுகளில் பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதே போல் வெளிநாட்டில் உள்ள மாணவர்களும் இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடர ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் உயர் கல்வி தொடர விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு நுழைவுத்தேர்வு கிடையாது என்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. மேலும் இது குறித்து யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் செய்தியாளர்களிடம் சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

IRCTC அறிமுகம் செய்துள்ள சிறந்த தமிழக சுற்றுலா Package – முழு விவரங்கள் இதோ!

அதாவது, வெளிநாட்டு மாணவர்களை தகுதியின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களில் சேர்த்து கொள்ளலாம். மேலும் இதற்கான தகுதியை எவ்வாறு கணக்கிடுவது என்பது தொடர்பான வழிகாட்டுதலை யுஜிசி விரைவில் வழங்கும் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் உள்ள கட்டமைப்பு வசதிகள், போதுமான பேராசிரியர்கள் எண்ணிக்கை மற்ற அடிப்படை தேவைகளை கணக்கில் கொண்டு மட்டுமே கூடுதல் இடங்களை ஒதுக்க பல்கலைக்கழகங்களுக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும். மேலும் வெளிநாட்டு மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்திய மாணவர்களை சேர்த்து கொள்ள அனுமதிக்க முடியாது என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு இந்தியாவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 75,000 ஆக இருந்தது. தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டில் எண்ணிக்கை சுமார் 23,400 ஆக குறைந்தது விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!