பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு முக்கிய உத்தரவு – UGC வெளியிட்ட அறிவிப்பு!
சுதந்திர போராட்ட வீரரும், சிறந்த எழுத்தாளருமான மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக கொண்டாட பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்த சுற்றறிக்கையை உயர்கல்வி நிறுவனங்களுக்கு UGC அனுப்பியுள்ளது.
மொழிகள் தினம்:
தமிழகத்தில் 1882-ஆம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்தவர் மகாகவி பாரதியார். தமிழ் மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரப்பியவர் இவர். தமிழ் மட்டுமல்ல ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளை கற்றுத் தேர்ந்தவர். தமிழ் மொழியில் பல காவியங்களை படைத்தார். இவர் எழுதிய நூல்களும், கவிதைகளும் இன்றளவும் மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்துகிறது.
Follow our Instagram for more Latest Updates
நாட்டின் விடுதலையில் இவரது பங்கு இன்றியமையாதது. தனது பாடல்களால் சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியவர். இவரது பிறந்தநாளை தேசிய மொழிகள் தினமாக கொண்டாட பல்கலைக்கழக மானிய குழு அறிவுறுத்தியுள்ளது. பழமொழி வித்தகரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளான டிச.11ம் தேதி அன்று மாணவர்களிடையே மொழி நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் கல்லூரிகளில் பேச்சு, கட்டுரை, கேளிக்கை போன்ற சுவாரசியமான நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று UCG வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தில் வரப்போகும் குட் நியூஸ்.. அரசு பள்ளிகளில் 4000க்கும் மேற்பட்ட பணி நியமனம்!
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து வினாடி-வினா, பாரம்பரிய இசைப் போட்டி, கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட நிகழ்ச்சிகள், என் மொழி என் கையெழுத்து போன்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்ள ஆசிரியர்கள் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.