தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – யுஜிசி விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் நேரடி தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என வெளியான அறிக்கை குறித்து யுஜிசி விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
யுஜிசி விளக்கம்:
தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளில் ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் சுழற்சி முறையில் தொடங்கப்பட்டது.
Post Office இல் சிறந்த சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.417 முதலீட்டில் ரூ.22.50 லட்சம் ரிட்டன்ஸ்!
வாரத்தில் மூன்று நாட்கள் நேரடி வகுப்புகளும் மூன்று நாட்கள் ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இனி கல்லூரிகளில் நேரடி தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும் என வெளியான அறிவிப்பை அடுத்து மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்தனர். அதன் பின் உயர்கல்வித்துறை சார்பில் நேரடி தேர்வுகள் நடத்தப்படாது. இன்னும் 2 மாதங்களுக்கு பின்னரே நேரடி தேர்வுகள் நடத்தப்படும் மாணவர்கள் அதற்குள் விடுபட்ட பாடங்களை படிக்க வேண்டும் என உயர் கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது.
டிசம்பர் 15 முதல் 1 – 7ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு | மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
இந்நிலையில் அனைத்து கல்லூரிகளிலும் இனி நேரடித் தேர்வு மட்டுமே நடத்தப்படும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை சமூக வலைதளங்களில் வெளியான கடிதம் போலியானது என யுஜிசி தெரிவித்துள்ளது. மேலும் அது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு தரப்பில் எந்த கடிதமும் வெளியாகவில்லை என பல்கலைக்கழக மானியக் குழு விளக்கமளித்துள்ளது. எனவே மாணவர்கள் குழப்பம் எதுவும் இன்றி வழக்கம் போல உயர் கல்வித்துறை அறிக்கையை பின்பற்றி தேர்வுக்கு தயாராகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.