கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீடு முறை மூலம் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் – யுஜிசி உத்தரவு!!
இந்தியாவில் உள்ள மத்திய மற்றும் மாநில கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையின் போது இடஒதுக்கீடு முறையை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாணவர் சேர்க்கை விதிகள்:
இந்தியா முழுவதும் அரசு கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை இடஒதுக்கீடு முறைப்படி நடத்தப்பட வேண்டும் என யுஜிசி கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை, “அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் மத்திய, மாநில கல்வி நிறுவனங்கள் இடஒதுக்கீடு முறையை பின்பற்றி கட்டாயம் மாணவர் சேர்க்கை அல்லது பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும்.
10 & 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான காமராஜர் விருது – பிப்ரவரி 5 கடைசி நாள்!!
மேலும் மாணவர் சேர்க்கையை இடஒதுக்கீடு முறையில் நடத்தி அதுகுறித்த விவரங்களை பல்கலைக்கழக மாநில குழு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களும், மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்