நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் – யுஜிசி வெளியீடு!!
கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படும் இந்த சூழலில் அனைத்து பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த துணை வேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களும் யு.ஜி.சி முக்கிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
யுஜிசி அறிவுறுத்தல்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் யு.ஜி.சி யின் பல முக்கிய தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் தற்போது மூடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்றின் பரவல் மிக அதிக பாதிப்பை உண்டாகியுள்ளது.
EPFO தொகையை அறிந்து கொள்ளும் எளிய வழிமுறைகள் – முழு விபரம் இதோ!!
இந்த சூழலில் யு.ஜி.சி தலைவர் டி.பி. சிங் அவர்கள், அனைத்து அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் அனைத்து கல்லூரிகளின் அதிபர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கொடிய தொற்று நோயினால் மக்கள் பாதித்து வரும் இந்த நிலையில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், அதிகாரிகள் மற்றும் பிற பங்குதாரர்கள் அனைவரும் மக்களை நல்ல ஆரோக்கியத்துடன், பாதுகாப்பாகவும், நோயினை பற்றி அறிந்தவர்களாகவும் வைத்திருக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கொரோனா தொற்று பரிசோதனை மையம் அமைத்தல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், தொற்று பாதித்தவர்களுக்கு மனநல ஆலோசகர்களை நியமிக்க என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.