CBSE தேர்வு முடிவுகள் குறித்து யுஜிசி முக்கிய அறிவிப்பு – மாணவர்கள் கவனத்திற்கு!
தமிழகத்தில் இன்னும் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகாமல் இருக்கும் நிலையில் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்றது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுத்தேர்வை சந்திக்க இருப்பதால் கொஞ்சம் பயத்தோடு தான் மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதினர். இதன் பின்னர், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியானது. மேலும், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்தே அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற ஆரம்பித்துவிட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால், தற்போது வரைக்கும் சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. பொதுத்தேர்வு முடிவுகளை கூடிய விரைவிலேயே வெளியிடும்படி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும், தற்போது வரைக்குமே சி.பி.எஸ்.இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகாமலே உள்ளது. இதனிடையே, தமிழகத்தில் உள்ள அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற்றே முடிந்துவிட்டது.
ஜூலை 24 வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்!
மாணவர் சேர்க்கை நிறைவடைந்து வரும் ஜூன் 18 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்படவுள்ளனர். இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே கல்லூரிகளில் அனைத்து இடங்களையும் நிரப்பிவிட கூடாது எனவும், சிபிஎஸ்இ மாணவர்களுக்காக தனியாக கல்லூரிகளில் இடம் ஒதுக்கியிருக்க வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. மேலும், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.