கூட்டு மற்றும் இரட்டை பட்டப்படிப்பு – யூஜிசி இறுதி வரை அறிக்கை வெளியீடு!!
கூட்டு பட்டப்படிப்பு:
ஒரே நேரத்தில் மாணவர்கள் இரண்டு பாடப்பிரிவுகளில் படித்து இரண்டு பாடங்களுக்கும் பட்டம் பெறும் முறை தான் கூட்டு பட்டபடிப்பு. கூட்டு பட்டபடிப்புகளை வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துவதற்கு இந்திய பல்கலைக்கழக மானியக்குழு முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்தது. இந்நிலையில் இதற்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழக பாலிடெக்னிக் கல்லூரிகளில் பருவத்தேர்வுகள் – ஏஐசிடிஇ அங்கீகாரம் கிடைக்காது!!
யூஜிசி அறிக்கை:
கூட்டு பட்டப்படிப்பு குறித்து யூஜிசி வெளியிட்டுள்ள இறுதி ஒழுங்கு முறை வரைவு அறிக்கையில், என்.ஏ.சி எனப்படும் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் அங்கீகராம் பெற்ற நாட்டில் உள்ள 100 சிறந்த பல்கலை பட்டியலில் உள்ள உயர்கல்வி நிறுவனங்கள் வெளிநாட்டிலும் அதே போன்று சிறந்த உயர்கல்வி நிறுவனங்களுடன் கூட்டாக பட்டப் படிப்புகளை அளிக்கும் வசதி உள்ளது. நாட்டில் உள்ள மற்ற கல்வி நிறுவனங்கள் இது போன்று கூட்டு அல்லது இரட்டை பட்டப்படிப்பும் யூஜிசி யின் அனுமதியை பெற்று நடத்தலாம்.
தொலைதூர வழியில் படிப்பவர்களுக்கு இம்முறை பொருந்தாது. இந்த இரட்டை பட்டப் படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் தனித்தனியாக சான்றிதழ்களை வழங்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் இந்த முறை செயல்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்