பாகிஸ்தானில் மேற்படிப்பு படிப்பவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை – UGC, AICTE அதிரடி உத்தரவு!
இந்தியாவில் இருந்து மேற்படிப்பிற்காக பாகிஸ்தான் செல்லும் மாணவர்களுக்கு இந்தியாவில் இனி வேலை கிடையாது என பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் வேலை இல்லை:
இந்திய மாணவர்கள் பலரும் வெளிநாடுகளுக்கு உயர்கல்விக்காக செல்வது வழக்கம். இந்நிலையில் இந்தியாவில் இருந்து மேற்படிப்பிற்காக பாகிஸ்தான் சென்ற மாணவர்களுக்கு இந்தியாவில் வேலை இல்லை என பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் ஆகியவை அறிவித்துள்ளனர். சீனாவில் படிப்பதற்கு எதிராக இந்திய மாணவர்களை யூஜிசி கடந்த மாதம் எச்சரித்தது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தானிலும் படிக்கக் கூடாது என யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அரசு வழங்கும் உதவித்தொகை!
மேலும், இந்திய மாணவர்கள் மற்றும் பிற நாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு மேற்படிப்பிற்காக செல்ல இருக்கும் மாணவர்களை செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கல்வி சான்றிதழுக்கு இந்தியாவில் வேலை வாய்ப்பினை வழங்க முடியாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானில் படித்துவிட்டு இந்தியாவில் மேற்படிப்பை முடிக்கலாம் என நினைத்தாலும் அதற்கு சாத்தியமில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
அப்படி கண்டிப்பாக இந்தியாவில் மேற்படிப்பை தொடர நினைத்தாலோ அல்லது இந்தியாவில் வேலைவாய்ப்பினை பெற நினைத்தாலோ கீழ் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும். அதாவது பாகிஸ்தானில் மேற்படிப்பை முடித்துவிட்டு இந்தியாவில் வேலைவாய்ப்பினை உருவாக்க நினைப்போர் பாகிஸ்தானில் பட்டம் பெற்ற பின்னர் இந்தியக் குடியுரிமை பெற்றிருந்தால் உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு அனுமதி சான்றிதழைக் கட்டாயம் பெற்றிந்தால் மட்டுமே இந்தியாவில் வேலைவாய்ப்பினை உருவாக்கிக்கொள்ள முடியும் என UGC மற்றும் AICTE தெரிவித்துள்ளது.