தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – உதயநிதி ஸ்டாலினை கேள்வி கேட்ட மக்கள்!

0
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - உதயநிதி ஸ்டாலினை கேள்வி கேட்ட மக்கள்!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி - உதயநிதி ஸ்டாலினை கேள்வி கேட்ட மக்கள்!
தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி – உதயநிதி ஸ்டாலினை கேள்வி கேட்ட மக்கள்!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது, இந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது இரண்டு பெண்கள் ஒரு சில கோரிக்கைகளை வைத்துள்ளார். அந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

‘என் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை’:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறும் என கடந்த மாதம் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு அடிப்படையில் பல்வேறு விதிமுறைகள் மூலம் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் திமுக கட்சி சார்பில் தஞ்சாவூர் கல்லுக்குளத்தில் இன்று காலை திமுக இளைஞரணிச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், திமுக பதவியேற்று 8 மாதங்கள் ஆகியுள்ளது, இந்நிலையில் அனைத்து துறைகளிலும் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.

TCS நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் சம்பளத்தில் பணிவாய்ப்பு – பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு!

அந்த வகையில் திமுக தேர்தல் வாக்குறுதிகளான கொரோனா நிதி நிவாரணம் ரூ 4000, அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், ஆவின் பால் கட்டணக் குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு உள்பட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன மற்றும் இன்னும் உள்ள பல்வேறு வாக்குறுதிகள் அடுத்தடுத்த நாட்களில் நிறைவேற்றப்பட உள்ளது என குறிப்பிட்டார். மேலும் உதயநிதி ஸ்டாலின் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி நிறைவேற்றபட்டுள்ளதாக கூறினார். அப்போது தங்கம் என்ற பெண், தன்னுடைய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும், அதைத் தள்ளுபடி செய்து தருமாறு கோரிக்கை விடுத்தார்.

தமிழகத்தில் வருகிற பிப்.16ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

இதற்கு உதயநிதி ஸ்டாலின் அந்த பெண்ணிடம் உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி தருமாறு கூறினார். இந்த மனுவின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை மற்றொரு பெண் வண்டிக்காரத் தெருவைச் சேர்ந்த கவிதா, நானும் திருக்குவளையைச் சேர்ந்தவர்தான்,மூன்று பிள்ளைகளை வைத்து சிரமப்படுவதாகவும், நிதி உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதற்கு உதயநிதி ஸ்டாலின் மனு எழுதி தருமாறும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!