இந்தியாவின் 49 ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் – அறிவிப்பு வெளியீடு!
தற்போது உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து வரும் என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறுவதால் 49 ஆவது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யு.யு.லலித் நியமனம் :
இந்திய உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா விளங்கி வருகிறார். இந்நிலையில், என்.வி.ரமணாவின் பதவி காலம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெற இருக்கிறது. அதாவது, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தத்தின் ஒப்புதல் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்றார். இவரின் பதவி காலமும் தற்போது நிறைவடைவதால் 48வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித்தை நியமிக்க வேண்டும் என என்.வி.ரமணா அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
Exams Daily Mobile App Download
மேலும், யு.யு.லலித்தும் வரும் நவம்பர் 8 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற இருக்கிறார். இதனால், யு.யு.லலித் உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக பதவியேற்றாலும் கூட 74 நாட்கள் மட்டுமே பதவியில் இருப்பார். யு.யு.லலித் இது வரைக்கும் ‘முத்தலாக்’ முறை மூலமாக விவாகரத்து செய்யும் நடைமுறை என பல ஏராளமான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளையும் வழங்கியிருக்கிறார். அதாவது, யு.யு.லலித் கடந்த கடந்த 2014ம் ஆண்டு வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியானார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – 4% அகவிலைப்படி உயர்வு? முழு விவரம் இதோ!
இதற்கு பிறகு உதய் உமேஷ் லலித் 13வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இந்நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக இருக்கும் என்.வி.ரமணா வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித் செய்யப்பட்டுள்ளார். மேலும், உதய் உமேஷ் லலித்தின் பதவி காலமும் நிறைவடைந்த பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியான பி.எஸ்.நரசிம்ஹா பதவியேற்றம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.