திருவள்ளூர் மாவட்டத்துடன் 2 கிராமங்கள் இணைப்பு – தமிழக அரசு உத்தரவு!
பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய இரண்டு கிராமங்களின் நிர்வாகமானது காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய இரண்டு மாவட்டங்களின் கீழ் உள்ளது. இதனை தற்போது மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் உத்தரவு:
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு கூட மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. இது போன்று இதற்கு முன்னரும் கூட பலமுறை நடந்துள்ளது. இது போன்று மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்படும் போது எல்லை பகுதிகளில் அமைந்துள்ள நகரம் மற்றும் கிராமங்களின் நிர்வாகத்தில் ஏதேனும் குழப்பங்கள் ஏற்படுவதுண்டு. இது போன்று 1997ம் ஆண்டு செங்கை மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம், திருவள்ளூர் என இரு புதிய மாவட்டங்கள் அமைக்கப்பட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அப்போது முதல் பழஞ்சூர், பாப்பான்சத்திரம் ஆகிய இரண்டு கிராமங்களின் கிராம நிர்வாகம், நில ஆவணங்கள், வரி, பிறப்பு இறப்பு சான்றிதழ் பதிவு, மின்சாரம் வருவாய் ஆவணங்கள் போன்றவை காஞ்சிபுரத்தின் கீழும், மருத்துவமனைகள், காவல் நிலையம், ரேஷன் கார்டு போன்றவை திருவள்ளூர் மாவட்டத்தின் கீழும் இருந்து வந்தது. இதனால் அந்த கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளார்கள்.
UPSC NDA & NA (I) இறுதி கட்ட தேர்வு முடிவுகள் 2022 – வெளியீடு!
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இந்த 2 கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தின் கீழ் இணைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து தற்போது தமிழக அரசு, பழஞ்சூர், பாப்பான்சத்திரம் கிராமங்களை திருவள்ளூர் மாவட்டத்தில் இணைத்து உத்தரவிட்டுள்ளது.