ட்விட்டர் செயலியில் வந்துள்ள மேஜர் அப்டேட் – மஸ்கின் புதிய திட்டம்!
ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல அதிரடி மாற்றங்களை செய்து வரும் எலான் மஸ்க், முக்கியமான மேஜர் அப்டேட் ஒன்றை செய்துள்ளார். இந்த மாற்றம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.
மேஜர் அப்டேட்:
ட்விட்டர் சமூகவலைத்தளம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்கள் கருத்துக்களை எந்த வித தடங்கலும் இல்லாமல் தெரிவிக்க கருவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், ஸ்பைஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் அதிபரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளார். அதன்பிறகு, ட்விட்டர் குறித்த பல விஷயங்களை அதிரடியாக மாற்றி வந்தார்.
வேலை தேடுபவர்களுக்கு பம்பர் ஜாக்பாட்.. மத்திய அரசில் 70,000 பணியிடங்கள் – சூப்பர் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
மேலும், ப்ளூ டிக் குறித்த விவகாரங்களும் எழுந்தது. அதன்பிறகு, அதிகபட்சமாக ட்விட்டரில் பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்தார். தற்போது உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்கு ப்ளூ டிக் அளிப்பது போலவே, புதிதாக இந்தியாவில் பிரதமர் மற்றும் உயர்மட்ட அமைச்சர்கள் உட்பட சில உயர்மட்ட நபர்களின் ட்விட்டர் கணக்குகளை ‘Official’ என்ற லேபிள் குறியுடன் அடையாளப்படுத்தியுள்ளார். இதன்படி, பிரதமர் நரேந்திர மோடியின் சரிபார்க்கப்பட்ட ப்ளூ டிக் ட்விட்டர் கணக்கில் வட்டத்தில் டிக் குறியுடன் ‘Official’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.