100 ஊழியர்கள் ராஜினாமா..அலுவலகங்கள் மூடல்.. ட்விட்டர் நிறுவனத்தில் நடப்பது என்ன? – ஷாக்கில் ஊழியர்கள்!
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியது முதல் பல மாற்றங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில் ட்விட்டர் ஊழியர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, அலுவலகங்கள் நவ. 21 வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் நிறுவனம்:
பிரபலங்கள் முதல் சாமானியர்கள் வரை பலர் ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை உலகத்தில் உள்ள பெரிய பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வாங்கினார். அதன் பின் ஊழியர்களுக்கு ஏகப்பட்ட மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஊழியர்களுக்கு எலான் மஸ்க் மெயில் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் ஊழியர்கள் வேலை நேரம் போக கூடுதலாக அலுவலகத்தில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில் அதற்கு பல ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் நிறுவனத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு இருப்பவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் மற்றவர்கள் வேலையை விட்டு ராஜினாமா செய்யலாம் என தெரிவித்தார். அதனால் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் ட்விட்டர் அலுவலகங்கள் நவம்பர் 21 ஆம் தேதி வரை மூடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இது குறித்து ஊழியர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் வெளியிடவில்லை.
தமிழகத்தில் நாளை (நவ.19) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!!
Exams Daily Mobile App Download
அதனால் எதிர்காலத்தில் ட்விட்டர் நிலைமை என்னவாகும் எனவும், 100க்கு மேற்பட்ட ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ட்விட்டர் நிறுவனத்திற்கு சிக்கல் ஏற்படும் என்பதால் அதனை எலான் மஸ்க் எவ்வாறு எதிர்கொள்வார் என்பது எல்லாம் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்த நடைமுறைகள் ட்விட்டரின் எதிர்காலத்தினை பாதிக்குமே தவிர, வளர்ச்சிக்கு உதவாது என சில நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தில் பெரும்பான்மையான ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் #RIPtwitter என்ற Hashtag ட்ரெண்டாகி வருகிறது.