Twitter செயலிக்கு காலவரையற்ற தடை – நைஜீரியா அரசு அறிவிப்பு!
நைஜீரியா நாட்டின் அதிபர் டிவீட்டர் கணக்கில் பதிவிட்டதை நீக்கியதன் விளைவாக, அந்நாட்டில் காலவரையின்றி டிவீட்டர் செயலியை தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசின் தடை உத்தரவு:
நைஜீரியா நாட்டின் அதிபர் முஹமது புஹாரி அவர்கள், நாட்டில் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தும் பிரிவினைவாதிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்று தனது டிவீட்டர் கணக்கின் மூலம் எச்சரிக்கை விடுத்தார். நைஜீரிய அதிபரின் இந்த பதிவை டிவீட்டர் நிறுவனம் நீக்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதிபரின் பதிவை நீக்கியதற்காக டிவீட்டர் செயலியை காலவரையின்றி நைஜீரியாவில் தடை செய்வதாக அரசு அறிவித்துள்ளது. அந்நாட்டு கார்ப்பரேட்டுகளின் இருப்பை கெடுக்கும் வகையில் டிவீட்டர் செயல்பட்டு வருவதாக நைஜீரிய தகவல் துறை அமைச்சர் லாய் முகமது அறிவித்துள்ளார். இருப்பினும் கார்பரேட்டுக்கு எதிரான செயல் என்னவென்பதை அவர் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
டிவீட்டர் தளத்தை நைஜீரியா நாட்டில் தடை செய்வதாக அந்நாட்டு தகவல் துறை அமைச்சகம் டிவீட்டரிலேயே அறிவித்துள்ளது. இன்று பல பகுதிகளிலேயும் டிவீட்டர் தளத்தை பயன்படுத்த முடியவில்லை என்று மக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நைஜீரிய அரசின் தடை வருத்தமளிப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்று டிவீட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.