கோபி ராதிகாவை திருமண கோலத்தில் பார்த்த பாக்கியா, திருமணம் நடக்குமா? பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், கோபி ராதிகா திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோபி திருமணம் என தெரியாமல் பாக்கியா சமைக்க இருக்கிறார். இந்நிலையில் உண்மை தெரிந்து பாக்கியாவின் மனநிலை எப்படி இருக்க போகிறது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பல சுவாரசியமான திருப்பங்களுடன் கதை சென்று கொண்டிருக்கிறது. பாக்கியாவும் கோபியும் பிரிந்துவிட, இதுவரை கோபி செய்த மோசடிகளை பற்றி நினைக்காமல் பாக்கியாவை பற்றியே செழியனும், ஈஸ்வரியும், இனியாவும் குற்றம் சொல்கின்றனர். எல்லாத்துக்கும் பணம் தான் முக்கியம் பணம் இருந்தால் இவர்கள் பேசமாட்டார்கள் என நினைத்துக் கொண்டு பாக்கியா தன்னுடைய தொழிலில் முன்னேற்ற வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார்.
அதனால் பாக்கியா பெரிய மண்டபம் கான்ட்ராக்ட் ஒன்றை வாங்க இன்டெர்வியூவிற்கு செல்கிறார். அதில் பாக்கியாவிற்கு தெரிந்த தொழிலதிபர் இருக்க அவர் பாக்கியாவிற்கு ஒரு வாய்ப்பை தர முடிவு செய்கிறார். அந்த சமயம் கோபியும் சந்துருவும் திருமண ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றனர். கோபி சந்துரு மண்டபம் புக் செய்ய, அங்கே சமைக்க பாக்கியாவை தேர்வு செய்கின்றனர். கோபி ராதிகா திருமணத்தில் தான் சமைக்க போகிறோம் என தெரியாமல் பாக்கியா சமையல் ஆர்டரை வாங்குகிறார்.
விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் – வெளியான முழு பட்டியல்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இனி வரும் எபிசோடில் பாக்கியா தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக செய்து முடிக்க வேண்டும் என நினைத்து தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு சமையல் செய்கிறார். எல்லாம் முடித்துவிட்டு பொண்ணு மாப்பிள்ளையை பார்க்க அங்கே கோபி ராதிகா திருமண கோலத்தில் இருக்கின்றனர். தன்னுடைய 25 ஆண்டு திருமண வாழ்க்கை இப்படி முடிந்துவிட்டது என நினைத்து பாக்கியாவால் அழுகையை அடக்க முடியாமல் இருக்கிறார். இது சம்மந்தப்பட்ட காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்