உலகம் முழுவதும் அதிகரிக்கும் காசநோய் பாதிப்பு.. தொடரும் இறப்புகள் – உலக சுகாதார நிறுவனம் தகவல்!
உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவ தொடங்கியது. தற்போது வரை அதன் பாதிப்புகள் இருந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை வெளியிட்டு வருகிறது.
காசநோய்:
கொரோனாவை விட கொடிய நோய் காசநோய் என்கிறார்கள் மருத்துவர்கள். அந்த அளவுக்கு இதன் தாக்கம் உடலில் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், சர்க்கரை நோயாளிகள், மது, மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்களுக்கு அடிமையானவர்கள் காசநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு வகையான பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இருமல், உடல் எடை குறைதல், மாலைநேரக் காய்ச்சல், பசியின்மை, சளியில் ரத்தம் போன்றவை காசநோயின் முக்கிய அறிகுறிகளாகும்.
Exams Daily Mobile App Download
இத்தகைய கொடிய நோயை முற்றிலும் ஒழிக்க தற்போது போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு காச நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 2 வருடங்களாக மக்களை தாக்கி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உலக நாடுகள் காச நோயை கண்டு கொள்வதில்லை.
OLA, UBER பயன்படுத்துவோர் கவனத்திற்கு – வெளியான அதிரடி உத்தரவு!!! இனி கவலை வேண்டாம்!!
Follow our Instagram for more Latest Updates
அதனால் காசநோய் பரிசோதனை குறைந்துள்ளது. அதோடு காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதும் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அதனை தொடர்ந்து காசநோய் தடுப்பு பணிகள் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. காச நோயின் தீவிரத்தை உரிய சிகிச்சை முறைகளால் கட்டுப்படுத்த முடியும். அதனால் உலக நாடுகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.