உண்மையிலேயே மோடி பெரிய மனிதர் – திடீரென பல்டியடித்த ட்ரம்ப்..!
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என்றால் அதற்கான பின் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று மிரட்டல் விடுத்த அதிபா் டொனால்ட் டிரம்ப் திடீரென பிரதமர் மோடி பெரிய மனிதர் என கூறியுள்ளார்.
உலக அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை இந்தியா அதிக அளவில் உற்பத்தி செய்து வருகிறது. இந்த மருந்தை மலேரியா நோயைக் குணப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு அளித்ததில் அவா்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவது கண்டறியப்பட்டது. அதைத் தொடா்ந்து தற்போது உலகம் முழுவதும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துக்கான தேவை அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அமெரிக்காவில் கொரோனா தாக்கம் வெகுவேகமாக தீவிரம் அடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவில் கடந்த மாதம் 25 ம் தேதி ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடி விதித்திருந்தது.
இந்த நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு வழங்கவில்லை என்றால் அதற்கான பின் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அந்த மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.
கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு, பாரசிட்டமால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளைத் தேவையான அளவுக்கு அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு முடிவெடுத்தது
இதையடுத்து, லட்சக்கணக்கான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்கியிருக்கிறோம். 2.90 கோடிக்கும் அதிகமான மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசியதை அடுத்து இந்தியாவில் இருந்து மிகப்பெரிய அளவில் அமெரிக்காவுக்கு வருகின்றன. நான் மோடியிடம் பேசினேன், நீங்கள் மாத்திரைகளை ஏற்றுமதி செய்வதற்கு அனுமதி அளித்தால் பெரிய மனிதர் என்றேன் உண்மையிலேயே மோடி பெரிய மனிதர்தான்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்