தமிழக அரசின் அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகள் நடத்த முடியுமா? உண்மை நிலவரம் இதுதான்!
தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெறாது என்று தகவல்கள் பரவி வரும் வேளையில் இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இதனால் இனி வரும் ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 2019ம் ஆண்டு மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டது. அரசு நடுநிலைப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கபட்டது. 3-4 வயது குழந்தைகள் எல்கேஜி வகுப்பிலும், 4-5 வயது குழந்தைகள் யுகேஜி வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர். எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் ஆங்கில வழி கற்றல் என்பதால் அரசு எதிர்பார்த்த அளவு மாணவர் சேர்க்கையும் அதிகரித்தது. தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்த பணி மாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழகத்தின் இம்மாவட்டத்தில் ஜூலை 6ம் தேதி உள்ளூர் விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!
இந்த நிலையில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக அரசு பள்ளிகளில் இயங்கி வந்த மழலையர் பள்ளிகளும் மூடப்பட்டது. அதன் பிறகு பாதிப்புகள் குறைந்து அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த 2021 பிப்ரவரி மாதம் மீண்டும் மழலையர் வகுப்புகளான எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெறாது என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. இது குறித்து விளக்கமளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் நிறுத்தப்படவில்லை.
Exams Daily Mobile App Download
எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார். இந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்டத்தின் மூலம் தயார் செய்து தரப்பட்டுள்ள புத்தகங்களில் இருந்து தமிழ்வழியில் கல்வியை கற்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அங்கன்வாடி மையங்களில் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுவதில்லை, மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை அங்கன்வாடி பணியாளர்கள் தயார் செய்து அளிப்பதுடன், ஆடல், பாடலுடன் இணைந்த கல்வி கற்பிக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.