ஜூன் 29 முதல் மும்மடங்கு ஊரடங்கு ஒரு வாரம் அமல் – சுகாதாரத்துறை நடவடிக்கை!
கேரள மாநிலத்தில் கடந்த 22ம் தேதி டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் நாளை முதல் ஒரு வாரம் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மும்மடங்கு ஊரடங்கு:
இந்திய முழுவதும் கொரோனா என்ற உயிர்கொல்லி வைரஸ் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தொற்று பரவலையும், உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்குகளை அறிவித்தும், கடும் கட்டுப்பாடுகளை விதித்தும் மக்களின் நடமாட்டத்தை குறைத்து நோய் பரவலை தடுக்க முயற்சி செய்து வருகின்றன. இதற்கிடையில் பூஞ்சை நோய்களும் பரவி வருகிறது. கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு பூஞ்சை நோய்கள் பரவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
ஜூலை 7 முதல் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு திட்டம்!
தடுப்பூசிகள் செலுத்தும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது கொரோனா பரவல் அனைத்து மாநிலங்களிலும் சற்று குறைந்து வருகிறது. ஆனால் அடுத்த தாக்குதலாக மாறுபாட்டுடன் கூடிய டெல்டா பிளஸ் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து டெல்டா பிளஸ் வைரஸ் கேரளாவில் கடந்த 22ம் தேதி பத்தனம்திட்டா மற்றும் பாலக்காட்டில் இரு பெண்கள் உட்பட மூன்று பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
கேரளாவில் இரு மாதங்களுக்கு பிறகு தற்போது தான் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டு வந்தது. இப்போது டெல்டா பிளஸ் வைரஸ் பரவல் காரணமாக கன்னடி பஞ்சாயத்தில் நாளை முதல் ஒரு வாரம் மும்மடங்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த பகுதிகளில் ரேஷன் கடைகள், மளிகை கடைகள், பால் கடைகள், பழம் மற்றும் காய்கறி கடைகள் மற்றும் பேக்கரிகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.