ஒரு வாரத்திற்கு 31 நகராட்சிகளில் மும்மடங்கு ஊரடங்கு – மாநில அரசு அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் கொரோனா புதிய பாதிப்புகள் தீவிரமடைந்து வருவதால் மாநிலம் முழுவதுமுள்ள 31 நகராட்சிகளில் நேற்று (ஜூலை 28) முதல் அடுத்து வரும் 1 வாரத்திற்கு மும்மடங்கு ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை பாதிப்புகள் குறைந்து வந்துகொண்டிருக்கும் சூழலில் கேரளா மாநிலத்தில் மட்டும் தினசரி பாதிப்புகள் 22 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த புதிய பாதிப்புகள் மூன்றாம் அலைக்கான துவக்கமாக இருக்குமா என மக்களிடையே பதட்டத்தை உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸின் இப்புதிய பாதிப்புகளை கருத்தில் கொண்டு, கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள் மற்றும் 29 கிராம பஞ்சாயத்து உட்பட 31 உள்ளாட்சி அமைப்புகளில் நேற்று (ஜூலை 28) முதல் ஒரு வாரத்திற்கு மும்மடங்கு ஊரடங்கை அமல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார வாகனம் வாங்க அரசு ஊக்கத்தொகை – 14,366 வாகனங்கள் விற்பனை!
இந்த இடங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 15% க்கும் அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகள் கேரளா அரசால் வகைப்படுத்தப்பட்ட D பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தவிர கோழிக்கோடு நகராட்சியில் உள்ள 28 கிராம பஞ்சாயத்துகள் C பிரிவில் உள்ளன. இந்த இடங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் 10% முதல் 15% வரை இருப்பதால் இந்த பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
மறுபுறத்தில் அயஞ்சேரி, அரிக்குளம், சக்கிட்டாபரா உள்ளிட்ட 8 பகுதிகளில் கொரோனா பாதிப்பு விகிதம் 5% முதல் 10% மாக இருப்பதால் இப்பகுதிகளில் பகுதி ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. தவிர 5% க்கும் குறைவான கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ள ‘A’ பிரிவின் கீழ் உள்ள பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கேரளாவில் நேற்று (ஜூலை 28) ஒரு நாளில் 22,056 புதிய பாதிப்புகள் மற்றும் 131 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.