தமிழகத்தின் 2வது தலைநகர் திருச்சி? சட்டசபையில் கோரிக்கை!
தமிழகத்தில் 16வது சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு அறிவிக்கைகள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தலைநகர்:
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் 16வது சட்டசபையில் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தனது உரை மூலம் தொடங்கி வைத்தார். இதை அடுத்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் கூட்டத்தொடரில் பல்வேறு அறிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பணிக்கு வருவதில் விலக்கு!
மேலும் இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள பல்வேறு கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இதற்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதி எம்.எல்.ஏ., இனிகோ இருதயராஜ் அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வை பாதுகாத்து தமிழக தேச தந்தையாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார்.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்தார். அதேபோல் தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து முறையாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.