தமிழகத்தில் அனுமதியில்லாமல் கட்டிய வீடுகளுக்கு ஜூன் 1 ஆம் தேதி சீல் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஒன்றான திருச்சியில், மாநகராட்சி சார்பில் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருச்சியில், மாநகராட்சி அனுமதியில்லாமல் கட்டிய வீடுகளை ஜூன் 1-க்குள் சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வீடுகளுக்கு சீல்
தமிழ்நாட்டில் சென்னை, கோவைக்கு அடுத்தப்படியாக பிரபலமான நகரங்களில் ஒன்றாக திருச்சி இருக்கிறது. இந்நிலையில் திருச்சியை அழகுபடுத்தும் நடவடிக்கையில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மாநகராட்சி ஒதுக்கிய இடங்களை தவிர மற்ற இடங்களில் போஸ்டர் ஓட்ட கூடாது.பொது இடங்களில் சிறுநீர் கழிக்க கூடாது என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் இத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – பொதுமக்கள் கவனத்திற்கு!
அதே போல மாநகராட்சி அனுமதியில்லாமல் கட்டிய வீடுகளை உடனே காலி செய்ய திருச்சி மாநகராட்சி ஆணையர் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், திருச்சி மாநகராட்சி அனுமதியில்லாமல் கட்டிய வீடுகளை ஜூன் 1 ஆம் தேதிக்குள் சீல் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
Exams Daily Mobile App Download