பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் நியமன அறிவிப்பாணை ரத்து – உயர்நீதிமன்றம் உத்தரவு!!
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஆசிரியர்கள் பணிக்கான அறிவிப்பினை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வழக்கமாக உள்ள அறிவிப்பில் இருந்து மாறுபடுவதாக வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த அறிவிப்பிற்கு தடை விதிப்பதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஆசிரியர் பணிக்கான அறிவிப்பு:
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 54 ஆசிரியர்களுக்கான பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8-ஆம் தேதி வெளியிட்டது. பொதுவாக கல்லூரி சார்பில் வெளியிடப்படும் அறிவிப்பில் ஒவ்வொரு துறையிலும் இருக்கும் காலிப்பணியிடம், இடஒதுக்கீடு, பல்கலைக்கழக மானிய குழு பணியிடங்கள் எனத் தனித்தனியே குறிப்பிட வேண்டும். ஆனால் இந்த அறிவிப்பு அப்படி இல்லாமல் அனைத்து பணியிடங்களுக்கும் சேர்த்து மொத்தமாக அறிவிக்கப்பட்டது. இது 20 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கத்திற்கு மாறாக உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது.
சுயதொழில் செய்ய மாணவர்களுக்கு கடன் உதவி
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் “கடந்த 20 ஆண்டுகளாக உள்ள விதிமுறைகளின் படி இல்லாமல் இந்த அறிவிப்பு வெளியானதால் இந்த அறிவிப்பினை ரத்து செய்ய வேண்டும். மேலும் இடஒதுக்கீடு முறைகளை பின்பற்றி காலிப்பணியிடங்களுக்கு புது அறிவிப்பை வெளியிட வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர்.
மாவட்ட நீதிபதி பணியிட முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு – 6 பேர் மட்டுமே தேர்ச்சி!!
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, காலி ஆசிரியர் பணியிடங்களுக்கான திருச்சி பாரதிதாசன் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்வதாக உத்தரவிட்டார். மேலும் இடஒதுக்கீடு முறைகளை பின்பற்றி புது அறிவிப்பு வெளியிட வேண்டும் என தீர்ப்பு வழங்கினார்.