TNPSC Group 4 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? ட்விட்டரில் ட்ரெண்டாகும் #WeWantGroup4Results!
TNPSC Group 4 தேர்வு ஆனது கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி அன்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு முடிவுகள் தற்போது வரை வெளியிடாமல் உள்ளது. அதனால் இத்தேர்வை எழுதிய 18 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் தற்போது ட்விட்டரில் தங்களுக்கு தேர்வு முடிவுகள் வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் குரூப் 4 பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு (2022) ஜூலை 24ம் தேதி அன்று TNPSC தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது. இத்தேர்வு மூலமாக சுமார் 7000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் தாமதமாகிக் கொண்டே இருக்கும் நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்கள் குறித்து TNPSC தேர்வாணையம் விளக்கம் அளித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
ரயில்களில் பயணம் செய்வோர் கவனத்திற்கு – இனி புதிய விதிமுறைகள்! IRCTC அறிவிப்பு!
இது தொடர்பான அறிவிப்பில், இம்முறை நடைபெற்ற குரூப் 4 தேர்வை 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதியுள்ளனர். மேலும் தேர்வில் முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வகையில் இரு பகுதிகளை கொண்ட ஒருங்கிணைந்த விடைத்தாள் முறையின்படி நடைபெற்றது. இதனால் அதிக எண்ணிக்கையிலான விடைத்தாள்களை திருத்தும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. அத்துடன் கணினி அடிப்படையிலான விடைத்தாள் திருத்தத்தில் பிழைகள் ஏற்படுவதால், நேரடி அலுவலர்கள் மூலமாக விடைத்தாள் சரிபார்ப்பு பணிகள் நடைபெறுவதாக விளக்கம் தெரிவித்தது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி முறைகேடுகள் ஏதும் நடைபெறாத வகையில், விரைவில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இத்தேர்வை எழுதி காத்திருக்கும் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட தேர்வர்கள் விரைவில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். இது தொடர்பாக ட்விட்டரில் தேர்வர்கள் #WeWantGroup4Results என்ற tag-ஐ ட்வீட் செய்து ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர்.