TN TET இரண்டாம் தாள் தேர்வுக்கான தேதி, நுழைவுசீட்டு வெளியீடு – ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு, பிப்ரவரி 3 முதல் 14ஆம் தேதி வரை நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு:
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அரசு மற்றும் அரசு உதவு பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வானது நடத்தப்படுகிறது. இந்நிலையில் அரசு பள்ளி ஆசிரியராக விருப்பமுள்ளவர்கள் கட்டாயம் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 க்கான கணினி வழித் தேர்வு குறித்த தேதிகள் தற்போது வெளியாகி இருக்கிறது.
இந்திய தொழிலதிபர் அதானியின் சொத்துமதிப்பு வீழ்ச்சி – உலக பணக்காரர்கள் பட்டியலில் பின்னடைவு!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன் படி பிப். 3 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்த தேர்வுகள் நடைபெற இருப்பதாகவும், அதற்கான கால அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான http://trb.tn.nic.in என்பதில் வெளியாகி இருக்கிறது. மேலும் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அனுமதிச் சீட்டு-1 (District – Admit Card-I) 27.01.2023 முதலும், தேர்வு மையம் குறித்த அனுமதிச் சீட்டு-2 திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. தேர்வர்கள் தங்களின் நுழைவுசீட்டை (District – Admit Card-I) தற்போது அதிகாரப்பூர்வ பக்கத்தில் User Id மற்றும் கடவுச் சொல் (Password) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.