தமிழகத்தில் உதவி பேராசிரியர், விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தேர்வு – TRB திட்டம்!
தமிழகத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஆயத்த பணிகள், வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்காக கல்லூரி பேராசிரியர்கள் போன்ற பணியிடங்களுக்கு விரைவில் தேர்வு நடத்த இருப்பதாக டிஆர்பி அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவல் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது மக்களிடையே எளிதாக பரவும் என்பதால் அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக அரசின் பல்வேறு முக்கிய தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. கல்வி நிலையங்களும் மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்துள்ளது. ஒரு சில இடங்களில் ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டது.
TNUSRB காவலர் பணி உடற்தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி – இன்று முதல் தொடக்கம்!
மேலும் அரசு காலியிடங்களை நிரப்புவதற்கான பல தேர்வுகளும் தற்போது நிலுவையில் உள்ளது. ஆசிரியர்களை தேர்வு செய்யும் TET தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் ஒத்தி வைத்துள்ளது. தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்று அபாயம் குறைந்து வருகிறது. அதனால் தமிழக அரசு தள்ளிவைத்துள்ள தேர்வுகளை நடத்துவதற்கு முடிவு செய்துள்ளது.
ஜூலை 20 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – உத்தரகண்ட் அரசு அறிவிப்பு!
இதனால் TET தேர்வு, உதவிப் பேராசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான ஆயத்த பணிகள், வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்காக கல்லூரி பேராசிரியர்கள் போன்றவர்களை TRB நியமித்து வருகிறது. வினாத்தாள் தயாரிப்பு பணிகளுக்காக பயிற்சி மையங்களின் பட்டியலை அனுப்பவும், பேராசிரியர்களின் பட்டியலை பாடவாரியாக அனுப்பவும், கல்லூரி கல்வி இயக்கத்துக்கு தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.