TRB உடற்கல்வி சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் – பணி நியமன ஆணை எப்போது !!
தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வாணையம் மூலமாக நடத்தப்பட்ட உடற்கல்வி சிறப்பாசிரியர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வலோங்குவது எப்போது என்று தேர்வர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர்கள் தேர்வாணையம் மூலமாக சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, இசை, தையல் மற்றும் ஓவியம்) பணிகளுக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. இதில் இசை, தையல் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளின் தேர்வாளர்களுக்கு மட்டும் பனி நியமன ஆணை வழங்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த உடற்கல்வி பிரிவில் தேர்வானவர்களுக்கு இன்னும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
கடந்த 3 ஆண்டுகளாக இந்த ஆணையினை வழங்காமல் ஆசிரியர் தேர்வாணையம் காலம் தாழ்த்தி வருவதாக தேர்வர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மிகவும் வறுமையில் இருப்பதாகவும் விரைந்து உடற்கல்வி சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்க உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்