சுற்றுலா மற்றும் ஆன்மிக பயணங்களை தவிர்க்க வேண்டும் – இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை !!

0
சுற்றுலா மற்றும் ஆன்மிக பயணங்களை தவிர்க்க வேண்டும் - இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை !!
சுற்றுலா மற்றும் ஆன்மிக பயணங்களை தவிர்க்க வேண்டும் - இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை !!
சுற்றுலா மற்றும் ஆன்மிக பயணங்களை தவிர்க்க வேண்டும் – இந்திய மருத்துவக் கழகம் எச்சரிக்கை !!

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மக்கள் கூட்டமாக சுற்றுலா மற்றும் ஆன்மிக பயணங்கள் செல்வதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ கழகம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா மூன்றாம் அலை:

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாதம் பரவத் தொடங்கிய வைரஸ் தற்போது வரை பேர அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 2021 மார்ச் மாதம் கொரோனா இரண்டாம் அலை பரவத் தொடங்கியது. முதல் அலையை விட இரண்டாம் அலை அதிக பாதிப்புகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்துகிறது. நாள் ஒன்றுக்கு 4 லட்சம் பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனர். சுமார் 4 ஆயிரம் பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மத்திய, மாநில அரசுகள் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றனர்.

கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு பேருந்து சேவைகள் – இன்று முதல் தொடக்கம்!

இந்த நிலையில் கொரோனாவிற்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தது. மேலும் மூன்றாம் அலை வரும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த காலகட்டத்தில் மாநில அரசுகள் தொடர்ந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா மூன்றாம் அலையை கட்டுக்குள் வைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இந்த நேரத்திலும் அரசும் மக்களும் அலட்சியம் காட்டுவது அச்சமூட்டுகிறது என இந்திய மருத்துவ கழகம் கூறுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தடுப்பூசிகளை விரைவாக செலுத்தி தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மக்கள் கூட்டமாக சுற்றுலா மற்றும் ஆன்மீக பயணங்கள் செல்வதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என இந்திய மருத்துவ கழகம் ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ஜான் ரோஸ் ஆஸ்டின் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தடுப்பு விதிமுறைகளை நாம் பின்பற்றுவதன் மூலம் மூன்றாம் அலை பாதிப்புகளை கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறியுள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!