தமிழகத்தில் மீண்டும் போக்குவரத்து சேவை தொடக்கம்? – முதல்வர் முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளதால் மக்களிடம் முதல்வர் காணொளி மூலமாக நன்றி தெரிவித்துள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த மாதம் வேகமாக பரவியது. அதனை தடுக்க மாநில அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 2 வாரம் முழு ஊரடங்கு காரணமாக ஒருவரிடம் இருந்து பரவும் சங்கிலி தொடர் உடைக்கப்பட்டுள்ளது, இருந்த போதிலும் மக்கள் நடமாட்டத்தை குறைக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போட்டோ, ஸ்டுடியோ நிறுவனங்கள் மீண்டும் திறப்பு – சங்க நிர்வாகிகள் கோரிக்கை!!
கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும், ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அரசும், மக்களும் ஒரே மாதிரி சிந்திப்பது மட்டுமின்றி மக்கள் எண்ணங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசின் நடவடிக்கை காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தாலும் இன்னும் கொரோனாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.
அதனால் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வர வேண்டும் அதே போல மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொருவரும் சுய கட்டுப்பாட்டை விதித்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை சரியாக பின்பற்றாவிட்டால் எந்த நேரத்திலும் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்று எச்சரித்துள்ளார் காவல்துறை கண்காணிப்பின்றி கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்கின்ற மக்களாக தமிழக மக்கள் மாற வேண்டும் விரைவில் பொதுப்போக்குவரத்து தொடங்கப்பட வேண்டும், பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்றால் மக்கள் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.