தமிழகத்தில் காலாவதி வாகன சட்டம் அமல்? போக்குவரத்து துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!!
நாட்டில் பழைய வாகனங்கள் மூலமாக காற்று மாசடைவதை தடுப்பதற்கு மத்திய அரசு காலாவதி வாகன சட்டத்தை விரைவில் அமல்படுத்த உள்ளது. இந்த சட்டம் தமிழகத்திலும் அமல்படுத்தப்படுமா என்பது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் கூறியவற்றை பற்றி பார்ப்போம்.
காலாவதி வாகன சட்டம்:
நாட்டில் தற்போது வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து உள்ளதால் காற்று அதிகமான அளவு மாசடைந்து வருகிறது. மேலும் இதில் குறிப்பாக பழைய வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையானது காற்றை மிகுந்த அளவு மாசுபடுத்தி வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு காலாவதி வாகன சட்டத்தை வருகிற ஏப்ரல் மாதம் முதல் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் தமிழகத்திலும் இத்தகைய சட்டம் அமல்படுத்தப்படுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வாடகை வாகன உரிமையாளர்கள் கூறியதாவது, தமிழகத்தில் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக போக்குவரத்து துறை மிகவும் பாதிப்படைந்துள்ளது. ஒரு வாகனம் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெற்று தான் வாங்க வேண்டியுள்ளது. மேலும் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் வரை கடனை செலுத்திய பிறகு தான் அந்த வாகனம் சொந்தமாக கிடைக்கிறது.
இந்த நிலையில், மத்திய அரசின் காலாவதி வாகன சட்டம் அமலுக்கு வந்தால் வாகன உரிமையாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்படக்கூடும். இதுமட்டுமல்லாமல் அரசு அலுவலகங்களில் உள்ள பழைய வாகனங்களை அழித்துவிட்டு புதிய வாகனங்களை வாங்க வேண்டும் என்பதால் அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்படும். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளதாவது, மத்திய அரசின் காலாவதி வாகன சட்டம் தொடர்பாக தமிழக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.