சென்னைவாசிகள் கவனத்திற்கு – போக்குவரத்து மாற்றங்கள் அறிவிப்பு! தற்போதைய நிலவரம்!
வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் சென்னையில் இன்னும் ஏராளமான சாலைகளில் நீர் தேங்கி உள்ளது. இதனால் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து இடமாற்றம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் தலைநகர் சென்னையில் சில முக்கிய சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. தற்போது மழையின் அளவு சற்று குறைந்துள்ளதால் படிப்படியாக இயல்பு நிலைக்கு மாறி வருகிறது. ஆனால் சென்னையில் இன்னும் சில சாலைகளில் நீர் தேங்கிய நிலையில் உள்ளது. அதனால் பொதுமக்கள் அந்த சாலைகளில் இயல்பாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சில போக்குவரத்து மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 – டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
அதாவது மாம்பலம்-ரங்கராஜபுரம் இரண்டு சக்கர வாகன சுரங்கப் பாதையில் செல்வதற்கு தடை செய்யப்படுள்ளது. இதனை தொடர்ந்து மேட்லி சுரங்கப்பாதையில் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் செல்வதற்கு தடை செய்யப்படுள்ளது. மேலும் வளசரவாக்கம் மெகா மார்ட் சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, ஆற்காடு ரோடு செல்வதற்கு கேசவர்த்தினி சாலை நோக்கி வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது. இதே போல் வாணி மஹால் முதல் பேன்ஸ்பர்க் வரை மழை நீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் ரூ.3000 உதவித்தொகையுடன் சைவ பயிற்சி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதற்கு மாறாக ஹபிபுல்லா சாலை மற்றும் ராகவைய்யா சாலை வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது. அத்துடன் மேடவாக்கம் முதல் சோழிங்கநல்லூர் வரை தண்ணீர் தேங்கி உள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மாறாக காமாட்சி மருத்துவமனை வழியாக சோழிங்நல்லூர் நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளது. மேலும் அசோக் நகர் போஸ்டல் காலனி சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் இன்று பிற்பகல் 2 மணி நிலவரப்படி சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையால் செய்யப்பட்ட போக்குவரத்து இடமாற்றங்கள் ஆகும்.