தமிழகத்தில் தடுப்பூசி செலுத்த மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்னுரிமை – நீதிமன்றம் உத்தரவு!!
தமிழக அரசு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு ஜூன் 14 வரை அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசும் இதனை சரி செய்யும் நோக்கில் கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் (Whats App) லோகோ நீல நிறத்தில் மாற்றம் – புதிய அப்டேட் அறிமுகம்!!
மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரேஷன் அட்டைகள் மற்றும் அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்கள் உதவித்தொகை வழங்க உத்தரவிடக் கோரி தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கையான கிரேஸ்பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
TN Job “FB Group” Join Now
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளிடம், குடும்ப அட்டை வைத்திருக்கும் 2,596 மூன்றாம் பாலினத்தவர் உள்ளிட்ட அரிசி அட்டைதாரர்களுக்கு அரசின் ரூ.4000 நிதியுதவியின் முதல் தவணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குடும்ப அட்டை இல்லாத 8,493 மூன்றாம் பாலினத்தவருக்காக, மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம் மூலமாக உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருநங்கைகளுக்கு தடுப்பூசி போட முன்னுரிமை வழங்கப்பட பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஜூன் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.