தமிழகத்தில் உபரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

0
தமிழகத்தில் உபரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உபரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் - கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் உபரி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் – கல்வித்துறை அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் இடமாறுதல் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை மாற்ற பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு குறித்து முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்:

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, ஆண்டுதோறும் விருப்ப இடமாறுதல் வழங்கப்படும். மேலும் பணி நிரவல் என்ற நடவடிக்கையின் கீழ், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களாக இடமாறுதல் வழங்கப்படுகிறது. அதாவது மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களுக்கு, அவரவர் பணியாற்றும் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி காலியிடங்களில் இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடங்கள் காலியாக இருந்தால், அவற்றில் அரசு பள்ளி ஆசிரியர்களை மாறுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.மாணவர்கள் எண்ணிக்கை விகிதத்தை விட, அதிக ஆசிரியர்கள் இருக்கும் நிலையை மாற்ற இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு மாற்ற கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் வரும் 15 ம் தேதிக்குள் உபரி ஆசிரியர்களை அரசு பள்ளிக்கு மாற்ற வேண்டும். மேலும் திருவண்ணாமலை, நாமக்கல் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை, எனவே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து சிவகங்கை, நாமக்கல், விருதுநகர் மாவட்டங்களில் அங்கீகாரமின்றி தனியார் பள்ளிகள் செயல்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மொபைல் எண் இல்லாமல் ஆதார் கார்டு அப்டேட் செய்ய புதிய வசதி – UIDAI அறிமுகம்

அதை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் தூத்துக்குடி,மதுரை, தென்காசி, கடலூர், புதுக்கோட்டையில் 9ம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றல் அதிகம் உள்ளது. எனவே இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து கல்வி தொடர்வதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் 11ம் வகுப்பு மாணவர்கள் பள்ளி இடைநிற்றல் அதிகரித்து உள்ளதாகவும், மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என கல்வித்துறை ஆணையிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!