தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு – ஜூலை 7 முதல் துவக்கம்!

0
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு - ஜூலை 7 முதல் துவக்கம்!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு - ஜூலை 7 முதல் துவக்கம்!
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வு – ஜூலை 7 முதல் துவக்கம்!

தமிழகத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு பணி நிரவல், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு வருகிற ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் கலந்தாய்வு:

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் பணி மாறுதல் வழங்கும் கலந்தாய்வு வருகிற ஜூலை 7 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இது குறித்து தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தமிழக அரசின் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணி நிரவல், பணிமாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடைபெற இருப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்ததால் இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த கலந்தாய்வு வருகிற ஜூலை மாதம் நடைபெற இருக்கிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு ஜூலை 7ம் தேதி நடைபெறும் எனவும், பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு மாவட்டம் விட்டு மாவட்டம் ஜூலை 8 ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது. நீதிமன்ற வழக்குகளில் புதிதாக காலிப்பணியிடங்கள் ஏற்பட்டால், அந்த காலிப்பணியிடங்களை நிரப்ப பதவி உயர்வு வழங்குவதற்கும், ஏற்கனவே பணி நிரவலில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது,.

அண்ணா பல்கலையில் சேர விரும்புவோர் கவனத்திற்கு – புதிய பாடங்கள் அறிமுகம்!

மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு 25.2.22 ஆம் தேதிக்குள் இருக்கும் காலிப்பணியிடங்களுக்கு மட்டும் தான் நடைபெறுகிறது. 2021-22 பொது மாறுதல் கவுன்சலிங்கில் ஒன்றியத்துக்குள் மற்றும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் விருப்ப மாறுதலில் சென்றவர்கள் பெயர்களை மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் பட்டியலில் இருந்து அவர்கள் பெயர்களை நீக்க வேண்டும். ஆனால், உபரி ஆசிரியர் பணி நிரவல் மற்றும் எல்கேஜி, யுகேஜி பணி நிரவல் ஆகியவற்றில் சென்ற ஆசிரியர்கள் பெயர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்தால் அவர்களின் பெயர்களை நீக்கம் செய்ய வேண்டியதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வித்துறை சார்பில் 2021-22 ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்களின் பெயர்பட்டியல் 21.6.22 அன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் முதன்மை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த பட்டியலில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதே படிவத்தில் திருத்தம் செய்து அனுப்பி வைக்க வேண்டும். இதற்காக முன்னுரிமை பட்டியல் எந்த பதவியில் மாறுதலுக்கு விண்ணப்பித்தாரோ அந்த பதவியில் முதல் முதலில் பணியில் சேர்ந்த நாளை வைத்து நிர்ணயம் செய்யப்படும் பணியில் சேர்ந்த நாள் ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பிறந்த தேதியின் அடிப்படையில் முன்னுரிமை நிர்ணயம் செய்யப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!