பழைய பாம்பன் ரயில் பாலம் – இனி ரயில் சேவை கிடையாது.. ரயில்வே மேலாளர் வெளியிட்ட தகவல்!
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பழைய பாம்பன் பாலம் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் இப்பாலத்தில் ரயில்களை இயக்க முடியாது என்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.
பாம்பன் பாலம்:
ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள பாம்பன் பாலம் இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய கடல் பாலங்களில் ஒன்று. இந்த பாலத்தில் ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. 100 ஆண்டுக்கும் மேலான பழமை வாய்ந்த இந்த ரயில் பாலத்தில் அடிக்கடி பழுதுகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து பேசிய மதுரை கோட்ட ரயில்வே மேலாளர், பாம்பன் பழைய ரயில் பாலத்தில் ரயில்கள் இயக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். ஏனெனில் பாலம் புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பழுதடைந்துள்ளது. சமீபத்தில் புயல் காரணமாக இந்த பகுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட அதிர்வு காரணமாக பொறியாளர்கள் பாலத்தை ஆய்வு செய்து இப்பாலம் போக்குவரத்திற்கு ஏற்றது அல்ல என்று கூறினார்.
அதன் அடிப்படையில் தற்போது ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் தற்போது புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தில் மட்டுமே இனி ரயில்களை இயக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த கட்டிட பணிகள் ஜூன், ஜூலை மாதங்களில் நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.