தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – பயிற்சி நாட்கள் பணிக்காலமாக மாற்றம்!
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருக்கும் நிலையில் விடுமுறை நாட்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு ஈடாக மறுவிடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு அறிவிப்பு:
தமிழகத்தில் சென்ற கல்வியாண்டில் வகுப்புகள் வழக்கம் போல நடத்தப்பட்டு முடிந்துள்ளன. இந்நிலையில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தற்போது அனைத்து மாணவர்களுக்கும் கோடைவிடுமுறை விடப்பட்டுள்ளது. மே 13 ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்புக்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடிந்துள்ளது. மேலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6ஆம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடந்து முடிந்துள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மே 9ஆம் தேதி தொடங்கி மே 30 ஆம் தேதி உடன் முடிவடைந்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் – காங்கிரஸ் உறுதி!
ஜூன் 14 ஆம் தேதி வரை மாணவர்களுக்கும் ஆசிரியர்களும் கோடை விடுமுறை முடிந்து வகுப்புகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர்கள் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் முன் கூட்டியே நடத்தப்படுவதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதனால் ஆசிரியர்கள் சற்று அதிருப்தியில் இருந்தனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் ஆசிரியர்களுக்கு விடுமுறை நாட்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளுக்கு வேறு தினத்தில் விடுப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விடுமுறை நாட்களில் பயிற்சிக்கான மாற்று விடுப்பு வழங்கப்படுவதால் ஆசிரியர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள நாளை பயிற்சி மையத்திற்கு கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பயிற்சி மையத்திற்கு வரும் போது வருகை சான்று பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.