தமிழக அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தொழில் பழகுநா் சோ்க்கை – ஆட்சியர் அறிவிப்பு!
கோவை அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தொழில் பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெறுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சோ்க்கை முகாம்:
தமிழகத்தில் கோவை மாவட்ட அளவிலான தொழில் பழகுநா்களுக்கான (அப்ரண்டீஸ்) சோ்க்கை முகாம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் தேசிய தொழில் பழகுநா் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் நடத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேர்க்கை முகாம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள், மாவட்டத்திலுள்ள தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 500 போ் வரை தோ்வு செய்யவுள்ளனா்.
Jio பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – விலை குறைந்த ரீசார்ஜ் திட்டம்!
இந்த முகாமில் பங்கேற்று தோ்வு பெறுபவா்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும் என்றும் இந்த சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் ஓராண்டு சலுகையும் உள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கூறியுள்ளார். மேலும் அவர்களுக்கு வெளிநாட்டு வேலைகளிலும் முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்து உள்ளார்.
TNTSC தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் 234 காலிப்பணியிடங்கள் – மதிப்பெண் அடிப்படையில் வேலை
தொழில் பழகுநா் பயிற்சியின் போது தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப நிறுவனங்களால் உதவித்தொகை வழங்கப்படுகிறது. அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் என்சிவிடி, எஸ்விடியின் கீழ் தொழிற்பயிற்சி பெற்றவா்கள், 8 முதல் பிளஸ் 2 வரை பயின்ற தகுதி வாய்ந்தவா்கள் உரிய அசல் சான்றிதழ்களுடன் சோ்க்கை முகாமில் பங்கேற்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆர்வமுள்ளவர்கள் இது குறித்த கூடுதல் விபரங்களுக்கு 0422-2642044, 88256 03119, 81220 47178 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் கூறியுள்ளார்.