ரயிலில் பயணம் செய்வோருக்கு ஷாக் அறிவிப்பு – டிக்கெட் கட்டணம் உயர்வு!
ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிப்போருக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புறநகர் ரயில் பயண டிக்கெட்டுகளில் இந்த கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. இந்த கட்டண உயர்வால் ரயிலின் ஒட்டுமொத்த டிக்கெட் கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 15 முதல் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் முறை அமலுக்கு வருகிறது.
அதிரடி உயர்வு:
கொரோனா எதிரொலியாக கடந்த இரண்டு வருடங்களில் ரயில்கள், விமானங்கள், சாலை போக்குவரத்து என பொதுப் போக்குவரத்து அனைத்தும் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலா பயணிகள், மாணவர்கள் சொந்த மாநிலங்களில் இல்லாமல் மற்ற மாநிலங்களில் சிக்கி தவிப்பவர்களை தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி அளித்து, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. அனைத்து மாநிலங்களிலும் தற்போது தாக்கம் குறைந்து வருவதால் ரயில் சேவையில் அமலில் இருந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் போக்குவரத்து சேவைகளில் இருந்த தடை நீக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ள உள்ளவர்களுக்கு அதிர்ச்சியான தகவலை ரயில் நிர்வாகம் வெளியிட்டு உள்ளது.
TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த ஷாக் அறிவிப்பு – தவறவிடும் 50,000+ மாணவர்கள்!
இந்த தகவலின்படி டீசல் இன்ஜின்களில் இயங்கும் ரயில்களில் நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகளிடம் இனி அதிக கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கூடுதல் கட்டண விதிமுறை ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின்களில் ஓடும் ரயில்களில் பயணிக்கும் பயணிகளிடம் ஹைட்ரோகார்பன் சர்சார்ஜ் (HCS) அல்லது டீசல் வரி ரூ.10 முதல் ரூ.50 வரை விதிக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இந்தக் கூடுதல் கட்டணம் டீசல் இன்ஜின்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் இயக்கப்படும் ரயில்களுக்கு பொருந்தும். உக்ரைன் மீதான ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகபட்ச விலையைத் தொட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து உள்ளது. டீசல் விலை அதிரடியாக உயர்வு காரணமாக இந்த கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணத்தில் ஏசி வகுப்புக்கு ரூ.50, ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ.25, பொது வகுப்புக்கு ரூ.10 என மூன்று பிரிவுகளின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட தூரத்தில் 50 % டீசலில் இயங்கும் ரயில்களை அடையாளம் காணுமாறு அனைத்து மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பட்டியல் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை திருத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களுக்கான சிரமங்களைக் குறைக்க, அடிப்படைக் கட்டணத்தை உயர்த்தாமல் கூடுதல் கட்டணத்தைச் சேர்த்தும் சலுகைகளைக் குறைத்தும் ரயில்வே முயற்சி செய்வதாக தெரிவித்து உள்ளது. ஆனாலும் டிக்கெட் விலை கணிசமாக உயரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.