சென்னை டூ திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – ரயில் சேவைகள் ரத்து!
சென்னை ரயில்வே நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில புறநகர் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து திருப்பதிக்கு செல்லும் ரயில்கள் சுமார் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரயில் சேவைகள் ரத்து:
ரயில் பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப அவ்வப்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் கூட அதிக அளவில் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். மக்களுக்காக திருவிழா, கோடை விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் செயல்பட்டது. தற்போது சென்னை கோட்டத்தில் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை to திருப்பதி விரைவு ரயில்:
தினமும் பகல் 2.15 க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் திருப்பதி விரைவு ரயில் இன்று மற்றும் நாளை மே 31ம் தேதி ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் 10:10 க்கு திருப்பதியில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் விரைவு ரயில் இன்று நாளை மே 31 ஜூன் 1, 7, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.
நெல்லூர் to சூலூர் பேட்டை ரயில்
நெல்லூரியிருந்து நண்பகல் 10.15க்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் புறநகர் ரயில் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சூலூர் பேட்டையில் இருந்து காலை 7.50க்கு புறப்படும் நெல்லூர் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
சூலூர் பேட்டை to சென்னை சென்ட்ரல் ரயில்
சூலூர்பேட்டை இருந்து பகல் 12.35 க்கு புறப்பட்டு செல்லும் சென்னை புறநகர் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஆவடி to சென்னை சென்ட்ரல் ரயில்
ஆவடியில் இருந்து அதிகாலை 4.25 க்கு புறப்பட்டு சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.