வேளாங்கண்ணி டூ எர்ணாகுளம் இடையே ஜூன் 4 முதல் ரயில் சேவை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா காலத்தில் பல ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. தற்போது நிலைமை சரியாகி பல இடங்களுக்கு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே புதிய ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
புதிய ரயில் சேவை தொடக்கம்:
சாமானிய மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை பயணம் என்றாலே முதலில் ரயில் பயணத்தை தான் பரிந்துரை செய்கிறார்கள். ரயிலில் பயணம் செய்வது செலவு குறையாவாகவும், அதிகம் அலைச்சல் இல்லாமல் இருக்கிறது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் பல இடங்களுக்கான ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதனால் பொதுமக்கள் சிரமத்தில் இருந்தனர். முக்கிய பகுதிகளில் விரைவு ரயில் சேவைகள் மட்டும் வழக்கம் போல செயல்பட்டு வந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி 4% அதிகரிப்பு!
இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து பல்வேறு இடங்களுக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் பயணிகள் ரயில் சேவை இந்த மாதம் தொடங்கப்பட இருக்கிறது. அது மட்டுமில்லாமல் தேனியில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் புதிதாக ரயில் சேவை விடப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது எர்ணாகுளம் – வேளாங்கண்ணி இடையே புதிய ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
Exams Daily Mobile App Download
இந்த வாராந்திர சிறப்பு ரயில் சேவை வரும் ஜூன் 4ம் தேதி முதல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வரை தொடங்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் எர்ணாகுளத்திலிருந்து மதியம் 12.35க்கு புறப்பட்டு, அடுத்த நாள் அதிகாலை 5.50க்கு வேளாங்கண்ணியை சென்றடையும் எனவும், இதற்கிடையே இந்த ரயில் கோட்டயம், செங்கனூர், மாவேலிக்கரா, கொல்லம், புனலூர், செங்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகையில் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நாகை வரை இயக்கப்படும் இந்த ரயில், இனி வேளாங்கண்ணி வரை இயக்கப்படும் என்பதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.