ட்ரெயின் பயணத்துக்கு புக் பண்ணி, பிளைட் ல பறக்கலாமா? ..சூப்பர் வாய்ப்பா இருக்கே!
மக்களுக்கு அதிக வசதியாக இருக்கும் என்பதால் ரயில் பயணத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், உங்களுக்கு முன்பதிவு செய்தும் இருக்கை கிடைக்க வில்லை என்றால் விமான டிக்கெட் வழங்கப்படுகிறது.
டிக்கெட் முன்பதிவு:
ரயில் பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு புதிய அதிநவீன வசதிகளை வழங்கி வருகிறது. முன்பதிவு மற்றும் ரத்து போன்றவற்றை மேற்கொள்வதற்காக இது போல் பல தனியார் செயலிகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், Train Man என்ற செயலியில் அதிக வாடிக்கையாளர்களை குவிப்பதற்காகவும், வாடிக்கையாளர்களுக்கு தங்கள் மேல் நம்பிக்கையை வரவைப்பதற்காகவும் புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.
திருப்பூரில் பொட்டானிக்கல் கார்டனுடன் கூடிய 17-வது சரணாலயம் – அமைச்சர் தகவல்!
Exams Daily Mobile App Download
அதன்படி, Train Man செயலியில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, அதன்படி டிக்கெட் 90% உறுதியாகிவிட்டால் இதற்காக ட்ரிப் அஷ்யூரன்ஸ் கட்டணமாக 1 ரூபாய் செயலியில் இருந்து வசூலிக்கப்படுகிறது. பயணிகளுக்கான இறுதி சாட் தயாரிக்கப்பட்ட பின்னர் டிக்கெட் உறுதி செய்யப்பட்டால் அந்த ட்ரிப் அஷ்யூரன்ஸ் கட்டணம் திருப்பி செலுத்தப்படும். மேலும், இறுதி வரை டிக்கெட் கிடைக்காத முன்பதிவு பயணிகளுக்கு அவர்களை பயணத்தை விமானத்தில் பறந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.