தமிழகத்தில் மீண்டும் துவங்கும் ரயில், விமான சேவைகள் – நிர்வாகம் முடிவு!

1
தமிழகத்தில் மீண்டும் துவங்கும் ரயில், விமான சேவைகள் - நிர்வாகம் முடிவு!
தமிழகத்தில் மீண்டும் துவங்கும் ரயில், விமான சேவைகள் - நிர்வாகம் முடிவு!
தமிழகத்தில் மீண்டும் துவங்கும் ரயில், விமான சேவைகள் – நிர்வாகம் முடிவு!

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக முடங்கியுள்ள ரயில் மற்றும் விமான சேவைகள் மீண்டுமாக துவங்க உள்ளது. பயணிகள் வருகையை பொறுத்து இந்த சேவைகளை அதிகரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

ரயில் சேவைகள்

தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா முழு ஊரடங்கு எதிரொலியாக கடந்த மாதம் முதல் ரயில் மற்றும் விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக ஏப்ரல் மாத இறுதியில் அதிகரித்து வந்த கொரோனா 2 ஆம் அலை காரணமாக போக்குவரத்து சேவைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு 100 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்தன.

தமிழகம் முழுவதும் வாகன சோதனைகள் தீவிரம் – உயர் அதிகாரிகள் உத்தரவு!

இந்த நிலையில் தான் மே 10 முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்த பொது முடக்க காலத்தில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், மாநிலம் முழுவதும் பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆனால் அவசர காரணங்களுக்காக பயணிப்பவர்களுக்கு தடை ஏற்படாதவாறு ரயில் சேவைகள் மட்டும் மிக குறைவாகவே இயங்கி வந்தன. அதிலும் மாநிலங்களுக்கு இடையே மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், ரயில் மற்றும் விமானங்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது முடங்கியிருக்கும் ரயில், விமான சேவைகளை மீண்டும் துவங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து மே மாதம் 2 ஆம் வாரத்தில் 30 முதல் 35 செயல்பட்டு வந்த விமானங்கள் தற்போது ஜூன் 9 ஆம் தேதி அளவில் 44 ஆக உயர்ந்துள்ளன.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் பெங்களூர் நகரத்துக்கு 5, மும்பைக்கு 4, டெல்லிக்கு 8 வரை தினசரி விமானங்கள் இயக்கப்பட்டன. அதே போல மீண்டும் அதிகரித்துள்ள விமான சேவைகளில் பயணிகள் எண்ணிக்கையும் 3,200 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னையில் இருந்து டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரயில் சேவைகளையும் தெற்கு ரயில்வே மீண்டும் துவங்கியுள்ளது. இவை பயணிகள் வருகைக்கு பின்பு இன்னும் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!