யார் அழைப்பது என்பதை திரையில் காண்பிக்கும் புதிய திட்டம் – இனி ‘UNKNOWN NUMBER’ தொல்லை இல்லை!
தொலைபேசியில் நம்மை யார் அழைகிறார்கள் என்று கால் வரும் போது திரையில் காட்டப்படும் முறை இனி அமலுக்கு வரும் என்று தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது.
TRAI திட்டம்:
தொலைத்தொடர்பு ஆணையம் தற்போது நாட்டில் ஏற்பட்டு வரும் பல குற்ற சம்வங்களும் பெரும்பாலும் தொலைபேசியின் வாயிலாக தான் நடந்து வருவதாக கூறியுள்ளது. தற்போதைய அவசர காலத்தில் தொலைபேசி இல்லாமல் மக்கள் ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது என்ற நிலை உள்ளது. இதனால், பொதுமக்கள் தொலைபேசியின் மூலம் நடைபெறும் குற்ற சம்பவங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க TRAI அமைப்பு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அதன்படி, தொலைபேசியில் நாம் பெயர் பதிவு செய்து வைத்திருந்தால் தான் கால் செய்யும் நபரின் பெயர் திரையில் காட்டப்படும். அப்படி நாம் பதிவு செய்யாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகள் UNKNOWN NUMBER என்று காட்டப்படும். இதனால், தேவையற்றவர்களின் அழைப்புகளை நாம் எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனை நாம் தடுக்க வேண்டும் என்றால் TRUE CALLER செயலியை தனியாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
இனி, தனியாக TRUE CALLER செயலி தேவைப்படாமல், தொலைபேசி எண் பெறும் போது வழங்கும் தகவல்களை கொண்டு கால் செய்பவரின் பெயர் திரையில் காண்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. இதற்கான பணிகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மேற்கோள்ள வேண்டும் என்றும் TRAI உத்தரவிட்டுள்ளது.