சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் – மாற்று பாதைகள் ஏற்பாடு!
சென்னை மாநகரில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நடவடிக்கையாக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது அதனை விரிவுபடுத்தும் விதமாக 2ம் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் நாளை சென்னையில் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்:
தலைநகர் சென்னையில் மக்கள் தொகை அதிகம். அதனால் எப்போதும் பொது இடங்களில் இரு மற்றும் நான்கு சக்கர வாகன போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் முக்கிய பகுதிகளில் சாலை போக்குவரத்து நெரிசலை தடுக்க மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த ரயில்களில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பணிக்கு செல்பவர்கள் வரை ஏராளமானோர் பயணித்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.63,246 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நாளை முதல் சென்னையில் போக்குவரத்து பாதைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 5 முதல் 11 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஆபத்து.. வேலைவாய்ப்பை தருவதாக உலா வரும் போலி தகவல்கள் – NIC எச்சரிக்கை!
Follow our Instagram for more Latest Updates
இந்த ஒரு வார காலத்திற்கு டிடிகே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பு மற்றும் கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு அதனை தொடர்ந்து சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2வது பிரதான சாலை வரை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் ஆழ்வார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி.ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலையை அடைய வேண்டும். மேலும் இலகு ரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1வது பிரதான சாலை வழியாக செல்லாம் என்று மாநகர போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.