ஊரடங்கு தளர்வுகள் – சுற்றுலா பயணிகள் வருகை தொடக்கம் !!
தமிழகத்தில் இ பாஸ் பெற்றுக்கொண்டு சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு அனுமதித்துள்ளது. அதனால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.
சுற்றுலா தலங்களுக்கு அனுமதி :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரம் காரணமாக மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. மேலும் மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசு போக்குவரத்து சேவைகளை ரத்து செய்தது. அதனால் குறிப்பிட்ட அவசர தேவைகளுக்கு மட்டும் இ- பதிவு பெற்று கொண்டு வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது. தடுப்பு பணிகள் மாவட்டம்தோறும் நடைபெற்றது அதன் ஒரு பகுதியாக 18 வயது முதல் அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
அஞ்சல் முகவர் வேலைவாய்ப்பு – ஜூலை 9ம் தேதி நேர்முகத் தேர்வு !!
அதன் தொடர்ச்சியாக ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. தொற்று குறைய ஆரபித்தபோது அரசு கொரோனா பரவலின் அடிப்படையில் மாவட்டங்களை 3 வகைகளாக பிரித்து தளர்வுகளை அறிவித்து வருகிறது. பிறகு ஜூலை 5 முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்ல விதிக்கப்பட்ட தொடர் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இ-பதிவு பெற்று கொண்டு கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மக்கள் சுற்றுலா செல்வதற்கு அரசு அனுமதித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகை தொடங்கியுள்ளது. வெகு நாட்களுக்கு பிறகு கொடைகானலில் மக்கள் கூட்டத்துடன் ஆரவாரமாக காட்சியளிக்கிறது. சுற்றுலா பயணிகள் வருகையால் கொடைக்கானலில் பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார் பூங்கா போன்ற இடங்களில் பொதுமக்கள் பார்வைகளாக அனுமதிக்கப்படுவர் என தோட்டக்கலை துணை இயக்குனர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் வருகையால் அங்கு தொழில் செய்யும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.